வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 120 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைத் தடுப்புப் பொலிஸார் இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடுவைச் சேர்ந்த 19 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கீரிமலைப் பகுதியிலிருந்து சிறிய ரக லொறி ஒன்றில் சுமார் 120 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற போது குறித்த இருவரும் சில்லாலையில் கைது செய்யப்பட்டனர்.
லொறி, கஞ்சா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்கதக்கது..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM