யாழ்பல்கலைக்கழகத்தில் மொழிப்பெயர்ப்பு துறையில் பட்டம்படிக்கும் மாணவர்களால் சர்வதேச மொழிப்பெயர்வு தினத்தை உலகிற்கு எடுத்துகாட்டும் முகமாக மொழிப்பெயர்ப்பு சம்மந்தமாகவும் இலங்கையில் மொழிப்பெயர்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் தெளிவூட்டும் கண்காட்சி ஒன்று பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளள கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வானது நேற்று காலை 9 மணியளவில் மொழிப்பெயர்ப்புத்துறை கற்கைநெறியின் இணைப்பாளர் கலாநிதி க. கண்ணதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன், இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தகுதிவாய்ந்த அதிகாரி கே.கந்தசாமியும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகர் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறுதுறைகளில் பட்டம்படிக்கும் மாணவர்களுக்கு இலங்கையில் உள்ள அரசதிணைக்களங்களின், மற்றும் அமைச்சுக்களின் பெயர்பலகைகளில் மொழிப்பெயர்ப்புக்கள் எவ்வாறு தவறாக அமைந்துள்ளது என்பது தொடர்பாகவும் எடுத்துக்காட்டுடியதுடன் தற்கால இளைஞர் யுவதிகளுக்கு மொழிகளின் அவசியம் பற்றிய விழிப்புணர்வுகளையும் மொழ்ப்பெயர்ப்புதுறை மாணவர்கள் நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM