செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு சூரன் போருக்கு வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து செல்லும் பக்தர்கள் ஆலயத்தினை அடைவதற்கான வசதிப்படுத்தலாக தொண்டமனாறு செல்வச் சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
சூர சங்காரத்திற்காக பெருந்தொகை பக்தர்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கினூடாக செல்வச் சந்நிதி ஆலயத்தினை வந்தடைவர். இந்நிலையில் இப்பாதை திறக்கப்படுவதன் அவசியம் குறித்து வலிகிழக்குப் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
போக்குவரத்திற்கான பாலத்தினை திறந்துவிடும் ஏற்பாடுகளை நீர்ப்பாசனத்திணைக்களமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீச்சல் பிரிவினரும் ஒளியூட்டல் மற்றும் வாகனத்தரிப்பிடம் உள்ளிட்ட வசதிப்படுத்தல்களை வலிகிழக்கு பிரதேச சபையும் பொறுப்பேற்றுள்ளன. இப்பாதையூடாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM