நியூசிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட் சர்ச்சில் இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் களத்தடுப்பை தேர்வுசெய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை குவித்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபடியாக ரோஸ் டெய்லர் 35 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோர்தன் 2 விக்கெட்டுக்களையும், சாம் கர்ரன், அடில் ரஷித், பிரவுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெயர்ஸ்டோ 35 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 59 ஓட்டங்களையும், மோர்கன் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் வின்ஸ் தேர்வுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM