இன்றைய தினம் அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் இருந்து நுவரெலியா வலயக்கல்வி காரியாலயத்திற்கு தபால்மூல வாக்களிப்பிற்கான ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று லிந்துலை பகுதியில் வைத்து இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது .
இச்சம்பவமானது இன்று பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது . தலவாக்கலை நுவரெலியா A7 பிரதான வீதியின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை பிரதேசத்தில் அமைந்துள்ள சமூர்த்தி வங்கிக்கு அருகாமையிலேயே குறித்த தனியார் பஸ் கல் வீச்சிக்குள்ளானது.
இதில் பயணித்த எவருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படாத போதிலும் பஸ்ஸின் கண்ணாடி பகுதி அளவில் சேதம் அடைந்ததாக அதன் சாரதி தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிசாரிடம் சம்பந்தப்பட்ட பஸ் சாரதி அல்லது நடத்துனரும் அத்தருணத்தில் முறைப்பாடு செய்யாத போதிலும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பஸ் வண்டியில் 35 ஆசிரியர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM