(நா.தனுஜா)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் அரசியல் செயற்பாடுகளின் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்கக்கூடிய நபர் ஒருவரையே நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதனூடாகவே சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்தவகையில் எதிர்வரும் காலத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
மினுவங்கொடையில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
எதிர்வரும் காலத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் அன்னம் சின்னத்திற்கு ஆதரவளிக்க முன்வருவார்கள்.
நான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவனாவேன். எனவே எமது சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே நான் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குகின்றேன். அதேபோன்று அவர் எவ்வித படுகொலை, ஊழல் மோசடி சம்பவங்களுடனும் தொடர்பற்ற ஒருவராவார் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM