தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
நடிகர்கள்
ரஜினிகாந்த் ரூ.10 இலட்சமும், சூர்யா, கார்த்தி ரூ.25 இலட்சமும், விஷால் ரூ.10 இலட்சமும், விக்ரம் பிரபு ரூ.5 இலட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.5 இலட்சமும் வழங்கியுள்ளனர். தனுஷ் ரூ.5 இலட்சமும், சத்யராஜ், சிபிராஜ் ரூ.2 இலட்சத்து 25 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.
தெலுங்கு நடிகர்கள்
தற்போது தெலுங்கு நடிகர்களும், முதல்வரின் வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ரூ.25 இலட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.10 இலட்சமும், நடிகர் மகேஷ்பாபு ரூ. 10 இலட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
டுவிட்டரில் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தங்களின் துயரங்களில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறியுள்ள அல்லு அர்ஜூனா, ரூ. 25 இலட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கில் நிதி
வருண்தேஜா ரூ. 3 இலட்சமும், சம்பூர்னேஷ் பாபு என்பவர் ரூ. 50000 நிதி அளித்துள்ளார். சாய் தருண் தேஜ் என்பவர் 3 இலட்சம் பெருமானமுள்ள நிவாரண பொருட்களை அளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM