பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழ்க்கட்சிகளும் இணைந்து எடுத்த முடிவுகளை அடையும்வரை நாங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழ்க்கட்சிகளும் இணைந்து முடிவு எடுக்கப்படாமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் தீர்வை ஆராய்ந்து முடிவுகளை அறிவிக்கவேண்டும் தனியே அறிக்கை விடுவது முறையல்ல நிதானம் தேவை பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழ்க்கட்சிகளும் இணைந்து எடுக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயபூர்வமானவை அவை அனைத்தும் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு உட்பட்டவை
ஒருமித்து செயற்படவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சியை செய்து ஆறு கட்சிகளும் ஒன்றினைந்து கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் ஒரு கட்சி வெளியேறியது எனினும் 5 கட்சிகளும் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இவை நியாயபூர்வமானவை. ஜனாதிபதிவேட்பாளர்களிடம் இதனை நாம் முறைப்படி முன்வைப்போம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அந்தக் கோரிக்கைகளை அடையும்வரை நாம் பல முயற்சி செய்துகொண்டேயிருப்போம். மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் நாம் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் தீர்வை ஆராய்ந்து முடிவை அறிவிப்போம். அவசரப்பட்டு தன்னிச்சையான ஒரு முடிவை அறிவிக்கமாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM