(நா.தனுஜா)
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தானே பதவி வகிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக செயற்படும் அதேவேளை, இப்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் புதிய அரசாங்கத்திலும் தொடர்வதற்கு அவ்வரசின் பிரதமர் என்ற அடிப்படையில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் தமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அலரி மாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு பெருமளவு கடனை மீளச்செலுத்த வேண்டிய நிலையிலிருந்த பொருளாதாரத்துடனேயே அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டோம். அவ்வாறிருந்தும் கூட பொருளாதாரத்தை வலுப்படுத்திய அதேவேளை, ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்தோம். அவற்றை விடவும் முக்கியமாக சுதந்திரமானதொரு சமுதாயத்தை உருவாக்கினோம். அதனூடாக இன்றளவில் ஊடகவியலாளர்கள் பெருமளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM