சஜித் ஜனாதிபதியாக செயற்படுகையில் பிரதமராக சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் - ரணில்

Published By: Vishnu

30 Oct, 2019 | 07:33 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தானே பதவி வகிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக செயற்படும் அதேவேளை, இப்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் புதிய அரசாங்கத்திலும் தொடர்வதற்கு அவ்வரசின் பிரதமர் என்ற அடிப்படையில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் தமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அலரி மாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு பெருமளவு கடனை மீளச்செலுத்த வேண்டிய நிலையிலிருந்த பொருளாதாரத்துடனேயே அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டோம். அவ்வாறிருந்தும் கூட பொருளாதாரத்தை வலுப்படுத்திய அதேவேளை, ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்தோம். அவற்றை விடவும் முக்கியமாக சுதந்திரமானதொரு சமுதாயத்தை உருவாக்கினோம். அதனூடாக இன்றளவில் ஊடகவியலாளர்கள் பெருமளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08