(ஆர்.விதுஷா)
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலவாக்கெடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் (பெப்ரல் ) ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
நாளையும் நாளைமறுதினமும் தபால் மூல வாக்கெடுப்பு இடம் பெறவுள்ள நிலையில் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தபால் மூலவாக்கெடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, அனைத்து பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளும் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறும் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன், தபால்மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் 4 மற்றும் 5 ஆம் திகதிகளிலும் இடம் பெறவுள்ளது.
அதேவேளை முக்கிய காரணங்களினால் வாக்களிக்க முடியாமல்போன வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM