தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பாண்' வகைகளில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் பரவலாக விற்பனையாகும் 32வகை பாண்களில் பொற்றாசியம் , புரோமேட் , பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இது சி.எஸ்.இ. எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சி.எஸ்.இ.துணை பொது இயக்குநர் சந்திரபூஷண் இது தொடர்பில் தெரிவித்ததாவது, பாண் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களில் கலந்துள்ள வேதிப்பொருட்களில் ஒன்று, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய '2பி கார்சினோஜென்' வகையைச் சார்ந்தது. மற்றொரு வேதிப்பொருள், தைராய்டு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவை வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட போதும் இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. டில்லியில் பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு சாதாரணமாக விற்கப்படும் பிரபல வர்த்தக குறியீடு உள்ள பாண், பன், பீட்சா மற்றும் பாவ் பாஜி போன்றவற்றின் 38 வகைகள், சி.எஸ்.இ. ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில், 84 சதவீத உணவுப் பொருட்களில் பொற்றாசியம் புரோமேட் அல்லது பொற்றாசியம் அயோடேட் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது தவிர வேறு சில ஆய்வகத்தில் நடந்த சோதனைகளிலும் இது போன்ற முடிவு தான் கிடைத்தன. சோதனைக்குள்ளான பாண் போன்றவற்றில் புற்றுநோய் உண்டாக்கும் உணவுப்பொருள் பக்கற்றுகளின் முத்திரை உள்ளிட்ட விடயங்களையும் சோதித்தோம். பின், சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் விஞ்ஞானிகளுடன் இதுகுறித்து பேசினோம்.
இச்சோதனைகள் மூலம் பான், பன் போன்ற வகை உணவுப் பொருட்களில் வேதிப்பொருள் கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
வேதிப்பொருள் கலந்திருப்பதாக கூறப்படுவது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாண் போன்றவற்றை மிருதுவாக்குவதற்காக பொற்றாசியம் அயோடேட் மற்றும் பொற்றாசியம் புரோமேட் பயன்படுத்த, ஐரோப்பிய நாடுகள் 1990இல் தடை விதித்தன. பின், பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, பிரேசில், இலங்கை, நைஜீரியா, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM