இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது உணவு சார்ந்த பழக்கவழக்கத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவது, பசிக்கும் போது சாப்பிடாமல், விரும்பும்போது சாப்பிடுவது, உடைகளை இறுக்கமாக அணிவது, சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வது அல்லது உறங்குவது போன்ற காரணங்களால் எம்மில் முப்பது சதவீத மக்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
இவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டவுடன் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளின் செயல்பாடுகளும் இணைந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அளவுடன் சாப்பிடுவது, நேரத்திற்கு சாப்பிடுவது. என உணவு பழக்கத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டால். நெஞ்செரிச்சல் பாதிப்பிலிருந்து விடுபடலாம். அத்துடன் மீண்டும் வராமல் தடுக்கலாம்.
வயிற்றில் சுரக்கும் அமிலமானது, உணவுக்குழாயில் மீண்டும் மேல்நோக்கி வருவதால் ஏற்படக்கூடியது தான் நெஞ்செரிச்சல். இது சில ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதனை உடனடியாக குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் நோயாக மாறிவிடக்கூடிய அபாயம் உண்டு. உடற்பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல், மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளுதல் என பல காரணங்களாலும் நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும்.
அஜீரணக் கோளாறுகளுக்கு நெஞ்செரிச்சல் மிக முக்கியமான அறிகுறி. அத்துடன் உணவை விழுங்குவதற்கு சிரமம் ஏற்படுவது. குரல் வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நடிப்பது, அதிகளவில் தண்ணீர் தாகம் எடுப்பது, இரவு நேரத்தில் உறக்கத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்படுவது.
என பல அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெஞ்செரிச்சல் வராமல் தடுப்பதற்கு இரவு நேரத்தில் உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவேண்டும். அதே தருணத்தில் இரவு பதினோரு மணிக்குள் உறங்கச் சென்று விடவேண்டும்.
டொக்டர் முரளி.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM