(செ.தேன்மொழி)
ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டதரணி ஒருவரை போல் போலியாக செயற்பட்ட நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவிகோரியுள்ளது.
தங்கல்லை நீதிவான் நீதிமன்றத்திற்கு சட்டதரணியைப் போல் முன்னிலையாகி பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்த ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.
சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக அவரின் புகைபடமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், அவரை அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதற்காக இரு தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டால் 047-2240229 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்கல்லை பொலிஸ் நிலையத்திற்கும், 077-2874343 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தகவல்களை வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM