பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் சகிப் அல்ஹசனுக்கு இரண்டு வருடம் சகல கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷ், இலங்கை மற்றும் சிம்பாவே இடையே நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஷாகிப்பை ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்ள இடைத் தரகர்கள் அனுகியுள்ளனர்.
அதேபோல 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போதும் இவரை ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்ள இடைத் தரகர்கள் அனுகியுள்ளனர்.
இந்த இரண்டு முறையும் இடைத் தரகர்கள் தன்னை அனுகியது தொடர்பாக சகிப் அல்ஹசன் ஐ.சி.சி.க்கு தெரிவிக்கவில்லை.
எனவே ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளை மீறியமைக்காக அவருக்கு இவ்வாறு இரண்டு ஆண்டுகள் சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM