(நா.தனுஜா)
நல்லாட்சியின் கொள்கைகளில் இருந்து விலகிச்சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வருவாராயின் அவரை இணைத்துக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அதற்கென குறிப்பிட்டதொரு காலத்தை வழங்குவதில் தவறில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதி என்ற வகையில் அவரால் நிறைவேற்றப்படாத பணிகளை செய்வதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. எதிர்வரும் வாரங்களிலேனும் அவரால் பூர்த்தி செய்யப்படாத விடயங்களை செயற்படுத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் அண்மையில் எமது பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. அந்த விஞ்ஞாபனத்தில் பல்வேறு எழுத்துப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM