சீனாவில் கட்டுமான பணிகளின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான நிலையில். இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது குயாங் மாகாணம். இம்மாகாணத்தில் உள்ள குவான்ஷு மாவட்டத்தில் தரைத்தளத்தின் கீழ் கார் நிறுத்துமிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வேளையில் சுமார் 14 ஊழியர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 14 நபர்களில் மூவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர். ஒருவரை மீட்புப்படையினர் உடனடியாக மீட்டனர். மீதமுள்ள 10 பேர் இடிபாடுகளில் முழுவதுமாக சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் மீட்புப்பணிகள் தாமதம் ஆகின. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இறந்த நிலையில் 8 பேரின் உடல்களை கண்டெடுத்தனர், மேலும் இரண்டு பணியாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM