(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளுக்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது அரசியல் ரீதியில் செயற்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இராஜகிரியவில் உள்ள எதிரணியின் காரியாலயத்தில் இடம் பெற்றது. அதில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தனித்து எடுத்த தீர்மானம் அல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய கட்சியின் செயற்குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனால் சுதந்திர கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக அரசியல் ரீதியில் செயற்படுகின்றார். ஒரு சிலரும் ஐக்கிய தேசிய கட்சியின் வரப்பிரசாதங்களுக்கு அடிபணிந்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை ஒருபோதும் பிளவுப்படுத்த முடியாது.
இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தரப்பிருக்கும் பாதிப்பு ஏற்பாத வகையில் நாட்டு தலைவர் என்ற ரீதியில் செயற்படுவார் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM