மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கப்பட்டது ;கைதானவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

29 Oct, 2019 | 01:21 PM
image

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில்  கைதான இளைஞனை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று  உத்தரவிட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை  கிட்டங்கி சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு   வீதியை இணைக்கும் சந்திக்கு  அருகாமையில்  திங்கட்கிழமை(28) காலை  குறித்த புதிய கைக்குண்டு    மீட்கப்பட்ட நிலையில்  பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.

வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய    இப்புதிய  கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வு  நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வீதியை   சேர்ந்த அப்துல் ரசீம் அஜ்மல் (வயது-24) என்பவர் கைதானார்.கைதானவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சி.சி.டி.வி காணோளி  தகவல் ஒன்றின் அடிப்படையில் மற்றுமிருவரை தேடி வருகின்றனர்.கைதானவர் திங்கட்கிழமை(28) மாலை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 தொடர்ந்து மீட்கப்பட்ட குண்டினை  மாலை 5 மணியளவில் விசேட அதிரடிப்படையின் விசேட அணி வருகை தந்து செயலிழப்பு செய்தனர்.அக்குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததுடன்  அப்பகுதி அதிர்ந்ததை அவதானிக்க முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17