கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில் கைதான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் திங்கட்கிழமை(28) காலை குறித்த புதிய கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.
வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இப்புதிய கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வீதியை சேர்ந்த அப்துல் ரசீம் அஜ்மல் (வயது-24) என்பவர் கைதானார்.கைதானவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சி.சி.டி.வி காணோளி தகவல் ஒன்றின் அடிப்படையில் மற்றுமிருவரை தேடி வருகின்றனர்.கைதானவர் திங்கட்கிழமை(28) மாலை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து மீட்கப்பட்ட குண்டினை மாலை 5 மணியளவில் விசேட அதிரடிப்படையின் விசேட அணி வருகை தந்து செயலிழப்பு செய்தனர்.அக்குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததுடன் அப்பகுதி அதிர்ந்ததை அவதானிக்க முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM