மக்களின் காணிகளை வழங்க மறுத்தால் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்வோம்

Published By: Vishnu

28 Oct, 2019 | 08:10 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு இடையுறுகளையும் மறுப்பையும் தொடர்ந்து வெளியிடுட்டு வருவதால் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

ஊடகங்களில் யாழ். மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுப்பதற்கும் வேறு அரச காணிகளுக்குச் செல்லவும் இணங்கியிருந்தனர். இப்பொழுது மக்கள் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர், என்றவாறு செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக அந்தந்த மாவட்டங்களின் ஆளுநர்களும் அவ்வப்பகுதி மக்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் படையினரும் (தளபதிகள்)கலந்து பேசி மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. சில இடங்களில் மக்கள் காணிகள் விடுவிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள தனியார் நிலங்கள் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள தனியார் நிலங்களுட்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கு இணக்கங் காணப்பட்டது. இவ்விணக்கங்கள் வடமாகாண ஆளுநர், பாராளுமன்றப் பிரதிநிதிகள், படைகளின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் எட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடப்படவேண்டும். இப்பொழுது அரச படைத்தரப்பினர் தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு இடையுறுகளையும் மறுப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கங்களுக்கு மாறாக அரசும் படைத்தரப்பினரும் தீர்மானிப்பார்களாயின் எமது பெயர்களில் 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வழக்குகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும். 2007ஆம் ஆண்டு தீர்ப்பானது அரசபடைகள் தனியார் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பதேயாகும். அதை விட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட பகுதியின் நிலச் சொந்தக்காரரின் உச்சநீதிமன்றத்திலுள்ள வழக்குகளையும் தொடர்ந்து நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். அதற்கு முன் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41