(இராஜதுரை ஹஷான்)
தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் கௌரவமாக வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
வவுனியா நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் எதிர்கால முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டு சிறந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளோம். கிராமிய கைத்தொழில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான கொள்கை திட்டங்களை உள்ளடக்கியுள்ளோம்.
கடந்த அரசாங்கம் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் போலியான பிரச்சாரங்கள் பரப்பட்டது. இதனையும் தமிழ் மக்கள் நம்பினார்கள். இதன் காரணமாகவே 2015ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். போலியான குற்றச்சாட்டுக்களுக்கும், வதந்திகளும் ஏமாற்றமடைய வேண்டாம்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆயுதமாக கொண்டு ஒரு தரப்பினர் மீண்டும் அரசியல் செய்தார்கள்.அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை நாட்டு மக்கள் முன்னெடுக்க வேண்டும். என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM