(எம்.நியூட்டன்)
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொன்னாலை மாதகல் - வீதியில் தனியார் காணிகளை கடற்படை முகாமுக்கு அபகரிப்பதற்காக அளவீடு செய்ய வருகை தந்த அதிகாரிகள் மக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.
சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிந்த பிரதேச மக்கள் இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் திரண்டனர்.
வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் அங்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வருகை தந்தனர்.
அவர்கள் அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அதனால் மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர் . அதிகாரிகள் மீள வரலாம் என எதிர்பார்க்கும் மக்கள் அந்த இடத்தில் திரண்டுள்ளனர் எனினும் அதிகாரிகள் வராத நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு கலைந்து சென்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கையானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM