(செ.தேன்மொழி)
அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை கடுகளவும் கவனத்தில் கொள்ளாது சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது உங்களுக்கு நினைவிலிருக்கும். மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதம் எந்த வகையிலும் நாட்டில் தலைத்தூக்காதவாறு தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் சீரழித்து விட்டது. .
மறுப்புறம் அரசசார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களாக செயற்படும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராணுவத்தின் கௌரவத்தை சீரழித்து விட்டனர். புலனாய்வு துறையினர் மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலிட்டனர். புலனாய்வு துறை , பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட துறைகளை தேசிய பாதுகாப்பை மையப்படுத்திய செயற்படுத்தினோம்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கவே இந்த துறைகளை பயன்படுத்துகின்றது. எனவே தான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஆகவே இவை எமது ஆட்சியில் சீர்செய்யப்படும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை முன்னினலைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அமையும் என்றும் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM