(இரா.செல்வராஜா, செ.தேன்மொழி)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸாரும் படையினருமாக சுமார் 70 ஆயிரம் பேர் ஈடுப்படுத்தப்பட இருப்பதாக பொலிஸ் தலைமையக தேர்தல் பாதுகாப்பு செயலகம் தெரிவிக்கிறது.
தேர்தல் சட்ட விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைபாடுகள் 2000 கடந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதற்கமைய 60 ஆயிரம் பொலிஸாரும் 10 ஆயிரம் சிவில் சேவை படையினரும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.இதை தவிர முப்படையினரும் , பொலிஸாரும் தனித்தனியாக ரோந்து சேவையில் ஈடுப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 12845 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதம் பாதுகாப்பு கடைக்கு அமர்த்தப்படவுள்ளனர். இதை தவிர வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கடுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு இராணுவத்தினர் ஈடுப்படுத்தப்படுவர்.
ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் அதிரடிப்படையினரும் சேவையில் ஈடுப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி ஆர்.எம்.லதீப் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM