ஜனாதிபதி தேர்தல் ; பொலிஸாரும் படையினருமாக 70 ஆயிரம் பேர் பாதுகாப்பு கடமையில்

Published By: Vishnu

27 Oct, 2019 | 06:46 PM
image

(இரா.செல்வராஜா, செ.தேன்மொழி)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸாரும் படையினருமாக சுமார் 70 ஆயிரம் பேர் ஈடுப்படுத்தப்பட இருப்பதாக பொலிஸ் தலைமையக தேர்தல் பாதுகாப்பு செயலகம் தெரிவிக்கிறது.

தேர்தல் சட்ட விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைபாடுகள் 2000 கடந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதற்கமைய 60 ஆயிரம் பொலிஸாரும் 10 ஆயிரம் சிவில் சேவை படையினரும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.இதை தவிர முப்படையினரும் , பொலிஸாரும் தனித்தனியாக ரோந்து சேவையில் ஈடுப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 12845 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதம் பாதுகாப்பு கடைக்கு அமர்த்தப்படவுள்ளனர். இதை தவிர வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கடுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு இராணுவத்தினர் ஈடுப்படுத்தப்படுவர்.

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் அதிரடிப்படையினரும் சேவையில் ஈடுப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி ஆர்.எம்.லதீப் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32