கோத்தாபய தனித்து வருவது அச்சமென்றால் சகோதரர்களுடன் இணைந்தேனும் விவாதத்துக்கு வரவேண்டும் 

Published By: Vishnu

27 Oct, 2019 | 06:20 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோத்தாபய ராஜபக்ஷ தனித்து வருவதற்கு அச்சம் என்றால் தனது சகோரதரர்களுடன் இணைந்தேனும் முடிந்தால் பகிரங்க விவாதத்துக்குவரட்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல நகரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனாதிபதியாகக்கூடியவருக்கு எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் தெளிவு இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது எழுதிக்கொடுப்பதை வாசித்து மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படும். 

அதனால் நாட்டின் ஜனாதிபதியாகக்கூடியவர் எவ்வாறு நாட்டை முன்னேற்றப்போகின்றார் என்ற வேலைத்திட்டத்தை பொது மக்களுக்கு முன்னால் தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் யார் ஜனாதிபதிக்கு பொருத்தமானவர் எனமக்கள் தீர்மானிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்குவதற்காக எனது எதிர்வேட்பாளரை பகிரங்க விவாதத்துக்கு அழைத்திருந்தேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. 

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படும். எனக்கு கீழ் அமைக்கப்படும் அந்த அரசாங்கத்தில் திருடர்களுக்கும் மோசடிகார்களுக்கும் எந்த இடமும் வழங்கப்படமாட்டாது. 

அதேபோன்று கொலை, கொள்ளைக்காரர்கள் போதை, பாதாள குழுக்கள் என்பவற்றுக்கும் எந்த வாய்ப்பும் எனது அரசாங்கத்தில் வழங்கப்படமாட்டாது. பாடசாலை மாணவர்களை சீரழிக்கும் குடு வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15