வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய இளைஞர்கள் மூவர் வவுனியா வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலடியில் சென்று இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பின்னர் முச்சக்கரவண்டிக்கான வாடகை பணமான 250 ரூபாயை முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் கேட்டநிலையில் பணத்தை தர முடியாது என கூறி முச்சக்கர வண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் முச்சக்கர வண்டியையும் சேதமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற ஏனைய முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படும் இளைஞனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ,கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியான பா.சிறிதரன் 51 வயது என்ற குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM