மட்டு கள்ளியங்காட்டில் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட 4 இளைஞர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் 

Published By: Digital Desk 3

26 Oct, 2019 | 12:15 PM
image

மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரதேசத்தில்  வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மடிகணணி மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்ட 4 இளைஞர்களையும் எதிர்வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள ஜெயந்திபுரம் கள்ளியங்காடு வீதியிலுள்ள உள்ள வீடு ஒன்றின் அறையில் தங்கியிருந்து ஒருவர் மின் உபகரணங்கள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் சம்பவதினமான நேற்றையமுன்தினம் வியாழக்கிழமை அறையை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பி வந்தபோது  கதவை உடைத்து அங்கிருந்த மடிகணணி, மின்னளுத்தி, தொலைபேசி மற்றும் மின் உபகரணங்கள் திருட்டுபோயுள்ளது. 

இதனையடுத்து பொலிசார் இருதயபுரம், கூளாவடி, கள்ளியங்காடு, திருகோணமலை வீதியைச் சோந்த 22, 21, 23. வயதுடைய 4 பேரை கைது செய்ததுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.

அத்துடன்,திருடப்பட்ட மின் உபகரணங்களை வாங்கிய ஒருவரை  கைது செய்து விசாரணயின் பின்னர் பொலிசார் விடுவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் நேற்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02