மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மடிகணணி மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்ட 4 இளைஞர்களையும் எதிர்வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள ஜெயந்திபுரம் கள்ளியங்காடு வீதியிலுள்ள உள்ள வீடு ஒன்றின் அறையில் தங்கியிருந்து ஒருவர் மின் உபகரணங்கள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் சம்பவதினமான நேற்றையமுன்தினம் வியாழக்கிழமை அறையை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பி வந்தபோது கதவை உடைத்து அங்கிருந்த மடிகணணி, மின்னளுத்தி, தொலைபேசி மற்றும் மின் உபகரணங்கள் திருட்டுபோயுள்ளது.
இதனையடுத்து பொலிசார் இருதயபுரம், கூளாவடி, கள்ளியங்காடு, திருகோணமலை வீதியைச் சோந்த 22, 21, 23. வயதுடைய 4 பேரை கைது செய்ததுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.
அத்துடன்,திருடப்பட்ட மின் உபகரணங்களை வாங்கிய ஒருவரை கைது செய்து விசாரணயின் பின்னர் பொலிசார் விடுவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM