(எம்.ஆர்.எம்.வஸீம்)
கோத்தாபய ராஜபக் ஷ வெற்றிபெற்றால் நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் அவரின் வெற்றியின் பங்காளிகளாக முஸ்லிம் மக்களும் திகழ வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித் தார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கை யில்,
யுத்தத்துக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பு இந்த அரசாங்க காலத்திலே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏப்ரல் தாக்குதலுக்கு இந்த அரசாங்கத்தின் கவனயீனமே காரணமாகும். அரசாங்கம் முறையாக செயற்பட்டிருந்தால் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறுவதை தடுத்திருக்கலாம். இதனால் முஸ்லிம் சமூகமே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது. அதனால் இந்தத் தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் நிச்சயமாகும். கோத்தபாய ராஜபக் ஷ மக்களின் தேவைகளை நன்கறிந்தவர். அதனால் அவர் எந்த இனத்துக்கும் அநீதி ஏற்படாதமுறையில் செயற்படுவார். சுனாமி அடித்ததுபோல் அவருக்கு வெற்றி கிடைப்பது உறுதியாகும். அதனால் அந்த வெற்றியில் முஸ்லிம் மக்களும் பங்காளிகளாக வேண்டும். கோத்தபாய ராஜபக் ஷ தொடர்பாக பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.
கொழும்பு மாநகரம் இன்று அழகான முறையில் காட்சியளிப்பதற்குக் காரணம் கோத்தபாய ராஜபக் ஷவே. நான் கொழும்பு மாநகர சபை மேயராக இருந்தபோது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் நானும் அவரும் இணைந்தே கொழும்பு மாநகரை அழகுபடுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரம் செலுத்திவரும் கொழும்பு நகருக்கு இந்த அரசாங்கம் எந்த அபிவிருத்தியும் செய்ததில்லை.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர முஸ்லிம்கள் பாடுபட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது இந்த அரசாங்க காலத்திலாகும். முஸ்லிம்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் முஸ்லிம்களின் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அப்போது சஜித் பிரேமதாச ஒரு பள்ளிவாசலைக்கூட பார்க்கச் செல்லவில்லை. ஆனால் தற்போது முஸ்லிம்களின் விடயத்தில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்.
தனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வழியியில் செல்வதாகக் குறிப்பிடுகின்றார். ரணசிங்க பிரேமதாசவுடன் இவரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இவர் தற்போது மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது. அவரால் தெரிவிக்கப்படும் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவதென்று இதுவரை சஜித் பிரேமதாச தெரிவிக்கவில்லை. அதனால் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் சஜித் பிரேமதாசவை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM