கோத்­தாவின் வெற்­றியில் பங்­கா­ளி­க­ளாக முஸ்லிம் மக்­களும் திக­ழ­ வேண்டும் - முஸம்மில்

Published By: Daya

25 Oct, 2019 | 12:13 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோத்­தாபய ராஜபக் ஷ வெற்­றி­பெற்றால் நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளதும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்­பதில் எந்தச் சந்­தே­கமும் இல்லை. அதனால் அவரின் வெற்­றியின் பங்­கா­ளி­க­ளாக முஸ்லிம் மக்­களும் திக­ழ வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரி­வித் தார்.

பொது­ஜன பெர­முனவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து நேற்று கிண்ணியா பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கை யில்,

யுத்­தத்­துக்குப் பின்னர் நாட்டின் பாது­காப்பு இந்த அர­சாங்க காலத்­திலே அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. ஏப்ரல் தாக்­கு­த­லுக்கு இந்த அர­சாங்­கத்தின் கவ­ன­யீ­னமே கார­ண­மாகும். அர­சாங்கம் முறை­யாக செயற்­பட்­டி­ருந்தால் இவ்­வா­றா­ன­தொரு தாக்­குதல் இடம்­பெ­று­வதை தடுத்­தி­ருக்­கலாம். இதனால் முஸ்லிம் சமூ­கமே பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு ஆளா­னது.  அதனால் இந்தத் தேர்­தலில் கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்­றி­ பெற்றால் நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் நிச்­ச­ய­மாகும். கோத்­த­பாய ராஜபக் ஷ மக்­களின் தேவை­களை நன்­க­றிந்­தவர். அதனால் அவர் எந்த இனத்­துக்கும் அநீதி ஏற்­ப­டா­த­மு­றையில் செயற்­ப­டுவார். சுனாமி அடித்­த­துபோல் அவ­ருக்கு வெற்றி கிடைப்­பது உறு­தி­யாகும். அதனால் அந்த வெற்­றியில் முஸ்லிம் மக்­களும் பங்­கா­ளி­க­ளாக வேண்டும். கோத்­த­பாய ராஜபக் ஷ தொடர்­பாக பல்­வேறு பொய்க் குற்­றச்­சாட்­டுகள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்தக் குற்­றச்­சாட்­டு­களில் எந்த உண்­மையும் இல்லை.

கொழும்பு மாந­கரம் இன்று அழ­கான முறையில் காட்­சி­ய­ளிப்­ப­தற்குக் காரணம் கோத்­த­பாய ராஜ­பக் ஷவே. நான் கொழும்பு மாந­க­ர­ சபை மேய­ராக இருந்த­போது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் நானும் அவரும் இணைந்தே கொழும்பு மாந­கரை அழ­கு­ப­டுத்தும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டோம். ஆனால் எப்­போதும் ஐக்­கிய தேசிய கட்சி அதி­காரம் செலுத்­தி­வரும் கொழும்பு நக­ருக்கு இந்த அர­சாங்­கம் எந்த அபி­வி­ருத்­தியும் செய்­த­தில்லை.

இந்த அர­சாங்­கத்தை ஆட்­சிக்குக் கொண்­டு­வர முஸ்­லிம்கள் பாடு­பட்­டார்கள். ஆனால் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டது இந்த அர­சாங்க காலத்­தி­லாகும். முஸ்­லிம்கள் அச்­சத்­து­டனே வாழ்ந்து வரு­கின்­றனர். ஏப்ரல் தாக்­குதல் இடம்­பெற்ற பின்னர் முஸ்­லிம்­களின் பல பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. அப்­போது சஜித் பிரே­ம­தாச ஒரு பள்­ளி­வா­ச­லைக்­கூட பார்க்­கச்­ செல்­ல­வில்லை. ஆனால் தற்­போது முஸ்­லிம்­களின் விட­யத்தில் முத­லைக்­கண்ணீர் வடிக்­கின்றார்.

தனது தந்தை ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் வழி­யியில் செல்­வ­தாகக் குறிப்­பி­டு­கின்றார். ரண­சிங்க பிரே­ம­தா­ச­வுடன் இவரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இவர் தற்போது மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது. அவரால் தெரிவிக்கப்படும் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவதென்று இதுவரை சஜித் பிரேமதாச தெரிவிக்கவில்லை. அதனால் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் சஜித் பிரேமதாசவை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30