(செ.தேன்மொழி)
பேலியகொட - ஒலியமுல்ல பகுதியில் கொக்கேன் போதைப் பொருளுடன் நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 35,44 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 208 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் நேற்று 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 78 கிலோ 305 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் , பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM