போதைப்பொருடன் நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட மூவர் கைது

Published By: Vishnu

25 Oct, 2019 | 11:41 AM
image

(செ.தேன்மொழி)

பேலியகொட - ஒலியமுல்ல பகுதியில் கொக்கேன் போதைப் பொருளுடன் நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 35,44 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 208 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் நேற்று 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 78 கிலோ 305 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் , பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53