(இராஜதுரை ஹஷான்)
அரசியல்வாதிகளின் தலையீடுகள் ஏதும் இல்லாமல் துறைசார் நிபுணர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒட்டுமொத்த மக்களின் அரசியல் அபிப்ராயங்கள் மற்றும் கோரிக்கைகளை உள்ளடக்கியே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளது. இந்த விஞ்ஞாபனத்தில் எவ்வித பக்கச்சார்பான காரணிகளும் உள்ளடக்கப்படவில்லை. அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதரத்தை முன்னேற்றுவதற்கு 500க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் கொள்கைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மனித உரிமை, விவசாயம், மற்றும் தொழில்னுட்ப விருத்தி உள்ளிட்ட பிரதான மூன்று விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதத்தில் கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் செல்வந்த தரப்பினரது கருத்துக்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பாரம்பரிய அரசியல முறைமையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற காரணத்தினால் கல்வி துறையில் முன்னேற்றமடைந்தவர்களின் கருத்துக்கும் , கொள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM