மன்னார் பிரதேசத்தில் சொகுசுவாகனம் ஒன்றில் 164.3 கிலோக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினருடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தைச் சோந்த ஒருவரை நேற்று (23) புதன்கிழமை கொழும்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த (19) திகதி மன்னார் இலுப்பைக் கடவை பிரதேசத்தில் கடற்படையின் வீதி சோதனை சாவடியில் ஊடாக செல்ல முற்பட்ட சொகுசு வாகனத்தை கடற்படையினர் நிறுத்துமாறு சமிக்கை காட்டிய போது அதனை மீறி வாகனம் சென்ற போது கடற்படையினர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து குறித்த வாகனத்தை மடக்கி பிடித்த வேளை வாகனத்தில் இருந்து 164.3 கிலோக்கிராம் கஞ்சாவை மீட்டது,
அத்துடன் ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் ஒருவர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்து 3 தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து பின்னர் செவ்வாய்க்கிழமை (22) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட மேலதிக நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்ட வேளை அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துமடு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் ஆயுதகுழுவைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை நேற்று (23) கொழும்பு போதை பொருள் தடுப்பு பிரிவினர் மட்டக்களப்பு வைத்தியசாலை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM