பாரிசவாத பாதிப்புக்குள்ளானவர்களின் குருதியில் நுண்ணிய காந்த மணிகளை உட்செலுத்தி விரைவாக குணமடையச் செய்யும் புதிய புரட்சிகர சிகிச்சை முறைமையொன்றை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
மேற்படி ஆய்வானது பிரித்தானிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க பாரிசவாத சங்க மாநாட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
உலகமெங்கும் பாரிசவாதத்தால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரித்தானியாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 152,000 பேர் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாரிசவாத பாதிப்புக்குள்ளானவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மூளைக்கான குருதிச் சுற்றோட்டத்தில் குருதி உறைந்து கட்டிபடுவதாலேயே அந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த மோசமான நிலைமையால் பாதிக்கப்பட்டு உயிர் தப்புபவர்களில் அரைப் பங்கினர் உடல் செயலிழப்புக்குள்ளாகின்றனர்.
குருதிச் சுற்றோட்டத்தில் ஏற்படும் குருதிக் கட்டிகளை உடைக்க எவ்வளவு நேரம் செல்கிறது என்பதில் அதனால் ஏற்படும் பாதிப்பு தங்கியுள்ளது. குருதிக் கட்டிகளை உடைக்க அதிக நேரம் செல்லும் போது அதனால் ஏற்படும் பாதிப்பும் பாரதூரமாக அமையும்.
இந்நிலையில் குருதிக் குழாய்க்குள் உட்செலுத்தப்படும் மேற்படி காந்த மணிகள், குருதிக் கட்டிகளை உடைப்பதற்கு பிரயோகிக்கப்படும் மருந்து உடல் முழுவதும் விரைவாக கடத்தப்பட்டு குருதிக் கட்டிகளை துரிதமாக சென்றடைய வழிவகை செய்வதாக பிரித்தானிய பல்கலைக்கழக மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரும் பாரிசவாத சிகிச்சை நிபுணருமான மருத்துவ கலாநிதி றிச்சர்ட் பெரி தெரிவித்தார்.
பாரிசவாத பாதிப்பு ஏற்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளில் 33 சதவீதமானோருக்கு அந்தப் பாதிப்பால் குறிப்பிடத்தக்க உடல் செயலிழப்பு எதுவும் ஏற்படுவதில்லை என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM