தூத்துக்குடியிலிருந்து மாலைத்தீவுக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற தோணி நடுக்கடலில் கவிழ்ந்ததில் பயணம் செய்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழகத்தின் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தோணி என அழைக்கப்படும் சிறிய ரக சரக்கு கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 19ம் திகதி தூத்துக்குடியிலிருந்து ‘ஆர்க் ஆஃப் காட்’ என்ற தோணி 150 தொன் வெங்காயம் மற்றும் சிமேந்து உட்பட கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றது.
இதில், மாலுமி ஜெயசந்திரன் தலைமையில் ஜோசப், சுரேஷ், டேவிட் ராஜா, உல்ஸ்டன், ராஜேஷ் சேவியா், செல்வம், விஜில்ஸ், மைக்கேல் ஆகிய ஒன்பது பேர் பயணம் செய்தனர். பயணத்திட்டப்படி, இந்தத் தோணி 22ம் திகதி மாலைத்தீவு சேரவேண்டும்.
ஆனால், 21ம் திகதி அதிகாலை 3 மணியளவில் மாலத்தீவில் இருந்து வடக்கே 116 கடல் மைல் தொலைவில் சென்றபோது நடுக்கடலில் கனமழை மற்றும் காற்றின் வேகத்தால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு தோணி கடலில் மூழ்கியது. தோணியில் இருந்த 9 பேரும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி நோக்கிச் சென்ற ‘வி.பி.பிராக்கா்ஸ்’ என்ற கப்பலில் இருந்தவா்கள் கடலில் தத்தளித்தவா்களை மீட்டனா். மீட்கப்பட்ட 9 பேரும் அந்த கப்பல் மூலம் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வந்தனா்.
அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கடலோர காவல் குழு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் காவல் துறையினா், வெளியுறவுத் துறையினா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, 9 பேரும் அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM