ஜனாதிபதி தேர்தல் - சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு 1485, பெப்ரல் அமைப்பிற்கு 185 முறைபாடுகள் 

Published By: Vishnu

24 Oct, 2019 | 04:43 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு 1,485 முறைப்பாடுகளும், பெப்ரல் அமைப்பிற்கு 185 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 16 நாட்களுக்குள் இந்த 1,485 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 957 முறைபாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 528 முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் , தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 1,414 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 61 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பத்து முறைபாடுகளும் அளிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 185 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் பெப்ரல் அமைப்பு , இதுவரையில் தேர்தல் தொடர்பில் 171 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  185 சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதுடன்,  இதன்போது ஒன்பது பாரியளவான சம்பவங்களும், 11 சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன. 

இந்த வன்முறை சம்பவங்களின் போது காயமடைந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு மேலும் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18