(செ.தேன்மொழி)
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு 1,485 முறைப்பாடுகளும், பெப்ரல் அமைப்பிற்கு 185 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 16 நாட்களுக்குள் இந்த 1,485 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 957 முறைபாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 528 முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் , தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 1,414 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 61 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பத்து முறைபாடுகளும் அளிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 185 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் பெப்ரல் அமைப்பு , இதுவரையில் தேர்தல் தொடர்பில் 171 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 185 சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதுடன், இதன்போது ஒன்பது பாரியளவான சம்பவங்களும், 11 சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன.
இந்த வன்முறை சம்பவங்களின் போது காயமடைந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு மேலும் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM