வவுனியா மேட்டுத்தெரு தோணிக்கல் பகுதியிலுள்ள பொது வீதி ஒன்றினை அப்பகுதியிலுள்ள நபர் ஒருவர் அடாத்தாக அபகரித்து வீதியை மறித்து மழை நீர் செல்ல முடியாமல் மண் நிரவி தடுத்து வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் தற்போது பெய்துவரும் பருவ மழையினால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து மேற்கொள்ள முடியாமலிருப்பதாகவும் பாடசாலை செல்லும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அப்பாதையை அபகரித்த நபரிடமிருந்து தடுத்து நிறுத்தி அவ்வீதியைப் பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு வவுனியா பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் அவ்வீதிக்கு எவ்வித நடவடிக்கையும் தெற்கு தமிழ் பிரதேச சபையினால் மேற்கொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்த பொதுப்பாதை நீண்டகாலமாக நபர் ஒருவரினால் அடாத்தாக அபகரிக்கப்பட்டு மண் நிரவப்பட்டு பொதுப்பாதைக்கு வேலி அமைக்கப்பட்டு தடை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதனைத்தடுத்து நிறுத்தி அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள குறித்த பொதுப்பாதையை மீட்டுத்தருமாறு சகல ஆவணங்களுடனும் வவுனியா பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதேச செயளாலரினால் தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு அப்பாதையை அபகரித்துள்ள நபரிடமிருந்து அவ்வீதியை மீட்டு அப்பகுதி மக்களிடம் வழங்குமாறும் தேவை ஏற்படின் பாதையை நில அளவைத்திணைக்களத்தின் மூலம் மீள எல்லைப்படுத்தி அமைக்கப்பட்டு காணப்படும் வேலியை அகற்றி அப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதுடன் தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறியத்தருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் எவ்வித நடவடிக்கையினையும் தெற்கு தமிழ் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படவில்லை தற்போது அவ்வீதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே எமது பொதுப்பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM