(ஆர்.யசி)
ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் ஆனால் அந்த மாற்றம் மீண்டும் கள்ளர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் மாற்றம் அல்ல. இப்போது ஏற்படும் மாற்றம் நாட்டினை ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் தான் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய ஆட்சி ஒன்றினை உருவாகக் முயற்சிக்கின்றனர். ஆனால் மக்கள் ஒவ்வொரு தடவையும் ஆட்சியை மாற்றிய போதிலும் மாற்றத்தின் பலன் கிடைக்கவில்லை.
இப்போது ஏற்படும் மாற்றம் நாட்டினை ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும். அதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கான மாற்றமாக அதனை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். பிரதான இரண்டு வேட்பாளர்களும் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளனர். இனியும் இவர்களின் வாக்குறுதிகளை நம்பினால் மக்களே விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆகவே மாற்றம் ஒன்றினை உருவாக்குவோம் அது எம்மை நாம் ஆளும் ஜனநாயக மாற்றமாக இருக்க வேண்டும் அதற்காக எம்முடன் மக்கள் கைகோர்க்க முன்வாருங்கள் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவிடம் தமது தேர்தல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM