கலிபோர்னியாவின் வடக்கு பகுதியான வையின் தயாரிப்பில் பிரசித்தி பெற்ற சோனோமா கவுண்டியிலுள்ள மலைப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது.
காட்டுத்தீ காரணமாக கடுமையான காற்றுக்கு மத்தியில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகிய நிலையில் கெய்செர்வில்லுக்கு அருகிலுள்ள மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாயகாமாஸ் மலைகளில் உள்ள கெய்சர்ஸ் புவிவெப்ப ஆலைக்கு அருகே தீ எரிந்து வருவதாகவும், தீப்பிழம்புகள் இப்பகுதி முழுவதும் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெய்சர்ஸ் வீதி முதல் நெடுஞ்சாலை 128, பைன் பிளாட் வீதி மற்றும் ரெட் வையின் தயாரிக்கும் தொழிற்சாலை வீதி அருகே இருப்பவர்கள் கட்டாயமாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக இப்பகுதி சிவப்புக் கொடி எச்சரிக்கையின் கீழ் உள்ளது. அந்த நிபந்தனைகள் தீப்பிழம்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஆரம்ப முயற்சிகளைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM