பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மரியகே தனது 40 ஆவது வயதில் கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரியகே வெர்வூர்ட். தனது 14 வது வயதில் 'டிஜெனரேட்டிவ்' தசை நோயால் பாதிக்கப்பட்டார். முதுகுத்தண்டு சம்பந்தமான இந்த நோய், நாட்கள் செல்ல செல்ல மூளைப்பகுதிக்கும், தசைகளுக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும். ஒரு கட்டத்தில், பக்கவாதம் ஏற்படும். இப்படிப்பட்ட ஆபத்தான நோயில், சிக்கியபோதும் மரியகே மனம் தளராமல் போராடினார்.
சக்கர நாக்காலியில் அமர்ந்து கொண்டு கூடைப்பந்து, நீச்சல், தடகளத்தில் சாதித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் 100 மீ., பிரிவில் தங்கம் வென்றார். 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். உலக சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்றுள்ளார்.
2016 இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் , 400 மீ., பிரிவில் வெள்ளி, 100 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். இதன்பின், பார்வை குறைபாடு ஏற்பட, இதுவே கடைசி போட்டி என அறிவித்தார்.
ஒவ்வொரு நாளும் வலியோடு போராடிய இவர், 2008 ஆம் ஆண்டில் கருணைக்கொலைக்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந் நிலையில் பெல்ஜியத்தில் உள்ள டயஸ்ட் நகரில் ஒப்பந்தபடி, நேற்றுமுன்தினம் கருணை கொலை செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM