குர்திஷ் படையினரை துருக்கியினுடனான சிரிய எல்லையிலிருந்து வெளியேற்றுவதை நோக்காகக் கொண்ட உடன்படிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் கைச்சாத்திட்டுள்ளனர்.
மேற்படி உடன்படிக்கையை வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையாக அந்நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக் குமிடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்தே மேற்படி உடன்படிக்கை எட்டப்பட்டுள் ளது.
துருக்கி இந்த மாத ஆரம்பத்தில் தனது நாட்டின் தெற்கேயுள்ள சிரிய பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குர்திஷ் படையினரை வெளியேற்றும் முகமாக தாக்குதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தது.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்து டன் நட்புறவைப் பேணி வரும் நாடுகளில் ஒன்றாகவுள்ள ரஷ்யாவானது சிரியாவில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து கவலையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் குறிப்பிட்ட எல்லைப் பிராந்தியத்தில் ரஷ்ய படையினரும் துருக்கி படையின ரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
அமெரிக்காவானது எவரும் எதிர்பாராத வகையில் மேற்படி பிராந்தியத்திலிருந்து தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையிலேயே துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
அமெரிக்கா சிரியாவிலிருந்து தனது படையினரை வாபஸ் பெறுவது அந்தப் பிராந்தியத்தில் துருக்கியினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கு வலுப்பட வழிவகை செய்யும் என அரசியல் அவதானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி உடன்படிக்கையின் கீழ் துருக்கி குர்திஷ் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றும் அதேசமயம் ரஷ்ய படையினர் எல்லைப் பிராந்தியத்திலுள்ள எஞ்சிய பிரதேசங்களை மேற்பார்வை செய்யவுள்ளனர். அவர்களது செயற்பாடுகள் நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது துருக்கியானது தனது நாட்டிலுள்ள 2 மில்லியனுக்கும் அதிகமான சிரிய அகதிகளை மீளக்குடியமர்த் தும் முகமாக பாதுகாப்பு வலயத்தை உருவாக்கும் முகமாக சிரியாவின் ராஸ் அல் அயின் மற்றும் தால் அபியத் நகர்களுக்கிடையில் 120 கிலோமீற்றர் நீள நிலப் பகுதியை கைப்பற்றியுள்ளது.
சிரிய பிராந்தியத்திலான குர்திஷ் படையினரின் தாக்குதல் நடவடிக்கைக்கு ரஷ்யா அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பு நாடுகளுக்குமிடையில் மோதல் இடம்பெறும் அபாயம் அகன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையின் கீழ் அந்தப் பிராந்தியத்தில் மீளத் தாக்குதல்களை நடத்துவதற்கான தேவை இல்லை என துருக்கி கூறுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவாலும் துருக்கியாலும் இணைந்து வெளியிடப்பட்ட அறிக் கையில் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கு வதற்காக தாக்குதலுக்கு இலக்கு வைக்கப் பட்ட பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள மன் பிஜ் மற்றும் தால் றிபாத் நகர்களிலிருந்தும் குர்திஷ் படையினர் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உடன்படிக்கை குறித்து ரஷ்ய ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துள்ள சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத், இது தொடர்பில் முழுமையான ஆதரவை வழங் கத் தான் தயாராக இருப்பதாக கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM