பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீண்டகாலமொன்றிற்கு தாமதிப்பதற்கான யோசனையை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்குமானால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்து வதற்கு நடவடிக்கையை முன்னெடுப்பார் என அவரது அலுவலகம் தெரிவிக்கிறது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான பிரெக்சிட் செயற்கிரமம் தொடர்பில் போரிஸ் ஜோன்ஸனால் முன்வைக்கப்பட்ட புதிய உடன்படிக்கை வரைபுக்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இணக்கம் தெரிவித்திருந்தபோதும் அதனை 3 நாட்களில் கைச்சாத்திடும் திட்டத்தை நிராகரித்திருந்தனர். இதன் காரணமாக பிரதமர் தனது பிரெக்சிட் சட்டமூலத்தை இடைநிறுத்த நேர்ந்தது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை யில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 299 வாக்குகளுக்கு 329 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் உடன்படிக்கை சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் அளித்திருந்தனர்.
ஆனால் அந்த உடன்படிக்கையில் துரிதமாக கைச்சாத்திடுவது தொடர்பில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன் ஸன் 14 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பாக எதிர்வரும் 31ஆம் திகதி காலக்கெடுவை நீடிப்பதா இல்லையா என்பது குறித்தும் அவ்வாறு நீடிப்பதானால் எவ்வளவு காலத்திற்கு நீடிப்பது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை தனது பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து பாராளுமன்ற உறுப் பினர்களின் ஆதரவைப் பெறத்தவறியதையடுத்து சட்டத்தின் பிரகாரம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கான காலக்கெடுவை 3 மாதங்களால் நீடிக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் போரிஸ் ஜோன்ஸனுக்கு ஏற்பட்டது. ஆனால் பிரதமர் அத்தகைய நீண்ட காலத்தாமதத்தை விரும்பவில்லை என அவரது அலுவலகத்தைச் சேர்ந்த வட்டாரம் ஒன்று தெரிவிக்கிறது.
பிரெக்சிடை தாமதப்படுத்த பாராளுமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணங்குமாயின் புதிதாக தேர்தலை நடத்துவதைத்தவிர வேறு வழி கிடையாது என அந்த வட்டாரம் கூறுகிறது.
இது தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவரான ஜாகொப் றீஸ் மொக் கூறுகையில், மேற்படி பிறிக்ஸிட் சட்டத்தை பாராளுமன்ற பிரதி நிதிகள் சபை மற்றும் பிரபுக்கள் சபையினூடாக எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் நிறை வேற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM