கோத்தாவிற்கு ஆதரவாக கிழக்கில் பிரச்சாரம் செய்யும் முக்கிய சந்தேகநபர்கள் -கொழும்பு டெலிகிராவ்

Published By: Rajeeban

23 Oct, 2019 | 03:52 PM
image

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கியசந்தேகநபர்களான  இரு கடற்படை அதிகாரிகள் கிழக்குமாகாணத்தில் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என நம்பகரமாக தெரியவருவதாக கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில்  குற்றம்சாட்டப்பட்டுள்ள  சுமித் ரணசிங்க மற்றும் டீகேபி தசநாயக்க  ஆகிய இரு அதிகாரிகளே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ள இருவரும் கிழக்கு மாகாணத்தி;ல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக  அங்கு தமக்கு பணியுள்ளதாக தெரிவித்து சென்றுள்ளனர்.

தசநாயக்கவும் ரணசிங்கவும் கிழக்கு மாகாணத்தை நன்கு அறிந்தவர்கள் அவர்கள் அங்கு பணியாற்றியுள்ளனர் திருகோணமலையை நன்கு அறிந்தவர்கள் என நம்பகதன்மை வாய்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் அணியினருடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

எனினும் இருவரினதும் இந்த நடவடிக்கை குறித்து இலங்கை கடற்படை தலைமைக்கு தெரிந்துள்ளது  என  கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.இருவரும் கிழக்கிற்கு ஏன் செல்லவிரும்பினர் என சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரியும் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

2010 ஜனாதிபதி தேர்தலில் இரு கடற்படை அதிகாரிகளும் மகிந்த ராஜபக்சவிற்கு சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் சட்டங்களின் கீழ்  முப்படையில் உள்ளவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது  தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51