வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இன்று காலை 7மணியளவில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூடுவந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்னீர் மீன்பிடித்தலில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடித்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நோக்கில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பில் சூடுவந்தபுலவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 150,0000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் , அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வலை, படகு மற்றும் நபரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பினை வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையிலான உத்தியோகஸ்தர்கள் குழாம் மற்றும் பூவரசங்குளம் விஷேட அதிரடிப்படையினரும் பங்கு கொண்டிருந்தனர்
இவ்விடயம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோ கித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்னீர் மாசடைவதாகவும் குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர் களைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM