’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவிய நிலையில் மிலிங்க மற்றும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ளது.
இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கையை சேர்ந்த 17 வீரர்கள் உட்பட 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை
இந் நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நடந்தது.
இதில் ஆப்கான் வீரர் ரஷித் கானை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
இதேவேளை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ரஸல் மற்றும் சுனில் நரேன், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், மெக்ஸ்வெல், ஆப்கானின் முஜீப்புர் ரஹ்மான், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஆனால், அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை யாரும் ஏலம் எடுக்கவில்லை. தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, யோர்க்கர் கிங்’ மலிங்கா ஆகியோரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM