ஹெரோயின் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டியில் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

23 Oct, 2019 | 10:57 AM
image

சுமார் ஒரு கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டி, வென்னவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவு  அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, (21) இரவு 9.20 மணியளவில் கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, குறித்த நபரிடமிருந்து 1.107.5 கிலோ கிராம் (ஒரு கிலோ 107 கிராம் 50 மில்லி கிராம்) ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதான நபர், வென்னவத்தை, வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான மொஹமட் சபீக் மொஹமட் சராஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து  சந்தேக நபரை,  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40