(எம்.ஆர்.எம்.வஸீம்)
அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்தி நாம் இலங்கையர் என்ற உணர்வோடு வாழ நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமாசபை தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நான் இன, மத பேதமின்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றேன். தொடர்ந்தும் அதே முறையில் சேவைகளை முன்னெடுக்க இருக்கின்றேன். அத்துடன் பாதுகாப்பிற்காகவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எனது திட்டங்களை வகுப்பேன். அதேபோன்று இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் பேச்சுக்கள் யாவற்றையும் இந்நாட்டில் தடை செய்து அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதனூடாக நாம் இலங்கையர் என்ற உணர்வோடு வாழ வழிவகுப்பேன் என்றார்.
இதன் போது அகில இலங்கை ஜம்-இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி குறிப்பிடுகையில்,
அகில இலங்கை ஜம் இயயத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். நீங்களும் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக்கொள்ளாத எமது இந்நிறுவனம் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து வந்துள்ளது. அவ்வாறே நாட்டில் சகல சமூகத்தவர் மத்தியிலும் சமாதானமும் சகவாழ்வும் மலர தன்னாலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. எமது நிறுவனம் இந்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னாலான பல பணிகளை செய்து வருகின்றது.
குறிப்பாக சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் சகவாழ்வை கட்டியெழுப்பவும் பல முயற்சிகளை செய்துவந்திருக்கின்றது. அத்துடன் தீவிரவாதம் வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை ஜம்இய்யத்துலமா மேற்கொண்டு வந்துள்ளது. இவற்றுள் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனம் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்கு உங்களது தந்தை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச பாரிய பங்காற்றியுள்ளார். அந்த வகையில் தொடரான அரசியல் பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் நாம் அனைவரும் இலங்கையராவர் என்ற உணர்வோடு உங்கள் சகல முயற்சிகளையும் அமைத்துக் கொள்வீர்கள் எனவும் இதனை உங்களது இலட்சியமாக எடுத்துக் கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.
இந்நாட்டில் சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும் பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்லஇறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்றார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ச்.எம்.பௌசி,முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் இன்னும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM