நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு தமிழ் அதிபர் ஒருவர் சேவையில் இருக்கும் பொழுதே சிங்கள மொழிமூல அதிபர் ஒருவரை நியமித்துள்ளமையை ஆட்சேபித்து அவ் வித்தியாலயத்தின் மாணவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் அட்டன் தலவாக்கலை பிரதான வீதியை மறித்து நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் கொட்டகலை பிரதேசத்தில் இந்த பாடசாலை தமிழ் மாணவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும். எனவே இங்கு தமிழ் மொழிமூல அதிபர் ஒருவரே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பகுதியில் இருந்து இடமாற்றம் பெற்றுள்ள இந்த சிங்கள மொழி மூல அதிபர் இப்பாடசாலைக்கு தற்காலிகமாக கடமையாற்ற வந்துள்ளதாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டாதகவும், பின்னரே இவர் நிரந்தரமாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் அதிபர் ஒருவர் கடமையில் இருக்கும் பொழுதே நிரந்தரமாக ஒரு சிங்கள அதிபரை நியமித்தமையை கண்டிப்பதாகவும் கொட்டகலை தமிழ் மகா வித்தியலயம் ஒரு கலவன் பாடசாலை என்பதையும் இம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் போராட்ட இடத்துக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளார். அவ்விடத்துக்கு வருகை தந்த ஆறுமுகன் தொண்டமான் நிலைமையை ஆராய்ந்து உடனடியாக நியமிக்கப்பட்டுள்ள சிங்கள மொழிமூல அதிபர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு அவர் கொண்டு வந்ததையடுத்து, புதிதாக நியமிக்கப் பட்டுள்ள அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வலயக் கல்வி பணிமனையினால் உறு தியளிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM