பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து மீண்டும் வாக்கெடுப்பை நடத்த பிரதமரின் அலுவலகம் அந்நாட்டு பாராளுமன்றத்தை வலியுறுத்தியுள் ளது.
பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பொன்று படுதோல்வியைத் தழுவியிருந்த நிலையிலேயே பிரதமரின் அலுவலகம் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வாக்கெடுப்பிலான தோல்வியையடுத்து போரிஸ் ஜோன்ஸன் சட்ட நிர்ப்பந்தம் காரணமாக பிறிக்ஸிட் செயற்கிர மத்தில் புதிதாக தாமதமொன்றை ஏற்படுத்தக் கோரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதமொன்றை எழுதி அனுப்ப நேர்ந்தது. ஆனால் அந்தக் கடிதத்தில் அவர் கைச்சாத்திடவில்லை.
இந்நிலையில் பிறிக்ஸிட் உடன் படிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘இல்லை’ அல்லது ‘ஆம்’ என தமது முடிவை தெளிவாகக் கூறுவதைத் தான் விரும்புவதாகத் தெரிவித்த போரிஸ் ஜோன் ஸன், பாராளுமன்றத்தின் கடிதம் பாராளுமன்றத்தின் தாமதத்திற்கு வழியேற்படுத்தித் தருவதற்கு நாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் புதிய வாக்கெடுப்பொன்றை நடத்துவதா இல்லையா எனத் தீர்மானிப்பது சபாநாயகர் ஜோன் பெர்கவ்விடமே தங்கியுள்ளது.
போரிஸ் ஜோன்ஸன் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிறிக் ஸிட் உடன்படிக்கையொன்று தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியிருந்தார். ஆனால் அதற்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையில் பிறிக்ஸிட் செயற்கிரமத்திலான தாமதம் தொடர்பான கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஆராய்ந்து வருகிறது. ஆனால் கடந்த சனிக்கி ழமை அந்த உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி அந்த உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டதாக பொருள்படாது என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
அதேசமயம் மேற்படி பிறிக்ஸிட் உடன் படிக்கை குறித்து பிரித்தானிய பாராளு மன்ற பிரதிநிதிகள் சபையில் தமக்கு தற் போதும் போதிய ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நம்புவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM