(எம்.மனோசித்ரா)
கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் தேர்தலில் தோல்வியடையப் போவதை அறிந்து கொண்டதால் விரக்தியடைந்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே ஐ.தே.க. ஆதரவாளர்களைத் தாக்குகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் தோல்வியடையப் போகிறோம் என்பதை அறிந்து கொண்டு விரக்தியடைந்துள்ளனர். இதனால் சஜித்தின் ஆதரவாளர்களைத் தாக்கியுள்ளனர். தேர்தல் பிரசார மேடைகளில் ஜனநாயகம் பற்றி உரத்து பேசுபவர்கள் இவ்வாறு தான் அதை நடைமுறைப்படுத்துவார்களா?
இதுவே மஹிந்த ராஜபக் ஷவினுடைய கொள்கையாகும். யுத்தத்தை நிறைவடையச் செய்ததைக் கூறியே கடந்த காலங்களில் தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் இம்முறையும் அவ்வாறு செயற்பட முடியாது. காரணம் கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலே நடைபெறுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறது. அதே போன்று பொலிஸாரும் சுயாதீனமாகச் செயற்படுகின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன. இவை அனைத்தையும் குழப்பி மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
மேடைகளில் சஜித்திடம் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு நேரடியாக அவருடன் பகிரங்க விவாதத்தில் கோத்தபாய ராஜபக் ஷ ஈடுபட வேண்டும். ஊடகங்களை பார்த்து அவர் பயப்படுகின்றார்.
மத்திய வங்கி பிணை முறி ஊழல் குறித்து பேசப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிணை முறி மோசடி இடம்பெறுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்திருந்ததாக அறியக்கிடைத்தது. எனினும் அந்த அறிக்கை வெளிப்படுத்தப்படவில்லை. அத்தோடு எயார் லங்கா விமான சேவை மூலம் 35 பில்லியன் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த 35 பில்லியன் இருந்திருந்தால் உரமானியத்தை வழங்கியிருக்க முடியும். இவ்வாறான மோசடிகள் குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM