இரத்தப் புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனை மெலோனி விஜேசிங்க தனது 17 ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அகில இலங்கை வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியின்போது சுகவீனமுற்ற மெலோனி விஜேசிங்கவுக்கு, மருத்துவ சோதனையில் நோய் தீவிரமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் அவரது நோய் தீவிரமடைந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
விசாகா கல்லூரி மாணவியான மெலோனி 2017 இல் 8ஆவது இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்தத் தொடரில் பிரகாசித்த மெலோனி எதிர்கால நட்சத்திரமாக உருவெடுக்கும் நம்பிக்கையையும் விதைத்திருந்தார்.
இந்நிலையிலேயே இந்த எதிர்பார்ப்புகளை நிராசையாக்கி விட்டு இந்த உலகை விட்டே விடைபெற்றுள்ளார்.
6 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட மெலோனி இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணியின் உப தலைவியாகவும் நியமிக்கப்பட்டிருந் தார்.
சிறந்த கோல் ஷூட்டராக வலம் வந்த மெலோனி உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரி வில் கல்வி கற்று ஒரு மருத்துவராக ஆவதற்கும் கனவு கண்டிருந்தாராம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM