ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளராக பலமும் ஆற்றலும் மிக்க ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தானே முதலில் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கெலிஓயாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாராளுமன்றத்திலும் கூட போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பின் கதவால் ஆட்சியொன்றை அமைத்துக் கொண்டு சபாநாயகரின் கதிரைக்கு தண்ணீர் ஊற்றினர். மேலும் அதனை உடைக்க முற்படும்போது தடுக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய் தூளை வீசினர்.
நானும் 25 வருட காலமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்து வந்துள்ளேன். ஆனால், இம்மாதிரியான மோசமான குழப்ப நடவடிக்கைகளில் இதற்கு முன்னர் எவரும் ஈடுபட்டதில்லை. அன்று நாங்கள் கதியற்றவர்களாக இருந்தோம்.
எனினும், நீதிமன்றத்தின் முன்னிலையில் போராடி மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. நான் வேறொரு கட்சியின் தலைவர் என்ற வகையில் செயற்பட்டதால் எதையும் சுதந்திரமாக கதைக்க முடிந்தது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் புதிய சக்தியும் ஆற்றலும் கொண்ட ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை முதன் முதலில் வெளிப்படையாக எடுத்துரைத்தேன்.
எமது அரசாங்கம் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்ததன் மூலம் சுயாதீன நீதிச்சேவை உருவாக்க முடிந்தது. கோத்தபாயவின் அமெரிக்கா விசா தொடர்பான விவகாரத்தையடுத்து எதிர்க்கட்சியினரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 16ஆம் திகதி மக்கள் நீதிமன்றத்தில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக நியமித்து தீர்ப்பளிக்க வேண்டும். எமது அரசாங்கம் ஊடகத்துறைக்கான பூரண சுதந்திரத்தை வழங்கியதுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிராகவும், செயற்படவும் முடிந்தது.
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் 11மில்லியன் ரூபாய்களை வங்கியில் தடுத்து நிறுத்தவும் முடிந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டாலும், நாம் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம்.
கண்டி மாவட்டத்தில் மட்டும் எமது அமைச்சின் மூலம் நீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக 100பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளோம். சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயனடையக் கூடிய இலங்கையில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்டத்தை கண்டி வடக்கு பாததும்பர பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளோம். மேலும் 2 இலட்சம் குடும்பங்கள் பயனடையக் கூடிய வகையில் 24000 மில்லியன் ரூபாய் இந்திய உதவித்திட்டத்தின் மூலம் குண்டசாலை - ஹாரகம குடிநீர் திட்டத்தை ஆரம்பித்தோம்.
அதேபோல் கலஹா தெல்தொட்ட பிரதேசத்திற்காக வேறொரு நீர் வழங்கல் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். உயர் கல்வி துறை முன்னேற்றத்திற்காக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் சம்பளத்தையும், கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கச் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தோம்.
இந்த அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 100க்கு 107வீதத்தால் அதிகரிக்கச் செய்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM