மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புகளை விட்டு வெளியேறமாட்டோம்.!

Published By: Robert

23 May, 2016 | 01:13 PM
image

மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புகளை விட்டு வெளியேறமாட்டோம்.

மத்துகம வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 14 குடும்பங்களை குடியிருப்புகளை விட்டு வெளியேறி தோட்ட வைத்தியசாலையில் சென்று தங்கியிருக்குமாறு தோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்தே குடியிருப்பாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

2012, 2013, 2014 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு ஏற்பட்ட மண்சரிவையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு இங்கு மேலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு வசித்து வந்த குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு 2014 ஜூன் மாதம் கடித மூலம் தோட்ட நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இதற்கிணங்க 100 நாள் ஆட்சியில் காணி ஒதுக்கப்பட்டு வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருந்த போதிலும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டிய பாதுகாப்பான வசதியான இடத்துக்கு மாறாக தோட்ட நிர்வாகம் தெரிவு செய்திருந்த காணியை விரும்பாத குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர்களான பீ.தீகாம்பரம், மனோகணேசன், வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்துக்கு கடித மூலமும் தொலைபேசி மூலமும் பல தடவைகள் கொண்டு வந்தும் நேரில் சந்தித்து எடுத்துக் கூறிய போதிலும் இதுவரை எந்த ஒரு பலனும் கிட்டாது கைவிடப்பட்டுவிட்டது.

மீரியபெத்த சம்பவத்தையடுத்து விழிப்படைந்த தோட்ட நிர்வாகம் இங்கு வசித்து வந்த குடும்பங்களை வெளியேற்றி பின்னர் மீண்டும் லயன் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பியது. தற்பொழுது நிலவி வரும் காலநிலை காரணமாக அச்சமடைந்துள்ள தோட்ட நிர்வாகம் மீண்டும் வெளியேறுமாறு கேட்டுள்ளது.

காலநிலை மோசமடையும் போது வெளியேறு என்று கூறுவதும் கால நிலை வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் பழைய இடத்துக்கே போ என்று கூறுவதும் வேடிக்கையாகிவிட்டது.

எங்களுக்கான வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தால் வெளியேறுவோம். அல்லாவிடின் மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மடிந்து போனாலும் பரவாயில்லை. நாங்கள் வெளியேறப் போவதில்லை. மண்சரிவு ஏற்பட்டு புதையுண்டு போகும் நிலை ஏற்படுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பையும் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், ட்ரஸ்ட் நிறுவனம், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் மலையக தலைவர்களுமே ஏற்க வேண்டும்.

எனவே அத்தகையதொரு துரதிஷ்ட நிலை ஏற்படும் முன்னர் மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பீ.திகாம்பரம் இது குறித்து விசேட கவனம் செலுத்தி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ஆபத்தை எதிர்நோக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38